கைவிலங்குடன் சிறைச்சாலை செல்லும் நாமல் ராஜபக்ஷ ;அதிர்ச்சியில் தென்னிலங்கை மக்கள்

இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்  இன்று (04) உத்தரவிட்டார்.

கைவிலங்குடன் சிறைச்சாலை செல்லும் நாமல் ராஜபக்ஷ | Namal Rajapaksa In Handcuffs Prison

எயார்பஸ் விமான கொள்வனவு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமான கொள்வனவு சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (04) முற்பகலில் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

சிறப்புச் செய்திகள்

Related News